• இனிமே டாக்ஸியில் பார்க்கலாம்! குட்டி விமானங்களை களமிறக்கும் உபேர்

    கோலிவுட்டில் அலாவுதின் அற்புத விளக்கு படத்தில் வரும் பறக்கும் கம்பளம், ஹாலிவுட்டில் அவென்ஜர்ஸ் படத்தில் வரும் பறக்கும் கப்பல் மற்றும் நிஜத்தில் உள்ள விமானம், ஹெலிக்காப்டர், ஜெட் என வான்வழியாக மக்களை ஏற்றி செல்லும் வானூர்திகள் அனைத்தும் மக்களின் பயணத்தை எளிதானதாகவும், விரைவானதாகவும் மாற்றுகிறது..

    பல நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கின்றனர். இந்த வரிசையில் வாகன உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஹுண்டாய் நிறுவனமும், வாகனங்களை வாடகைக்கு இயக்கும் உபெர் நிறுவனமும் இணைந்து பறக்கும் எலக்ட்ரிக் டேக்ஸியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பறக்கும் எலக்ட்ரிக் டேக்ஸியானது 290 கி.மீ/மணி என்ற அதிகபட்ச வேகத்தில் 300-600 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும் திறன் கொண்டது, மேலும் இந்த டேக்ஸி மின்சக்தியால் இயங்குகிறது. முழு சார்ஜில் சுமார் 96 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும்.

    இந்த டேக்ஸி மக்கள் டிராஃபிக்கில் மாட்டிக்கொள்ளாமல், போகக்கூடிய இடத்திற்கு விரைவாக சென்று மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த டேக்ஸிக்கு நான்கு சுழலும் காற்றாடிகள் இருந்தாலும் ஹெலிகாப்டர்களை விட குறைந்த அளவு சப்தம் வெளியாகும், இதில் 4 பேர் பயணிக்கலாம், முழுவதும் தானியங்கி இயக்கத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

  • வாடகை ஹெலிக்காப்டர் சேவை கோவையில் அறிமுகம்

    கோவையை சேர்ந்த பிளானட் எக்ஸ் மற்றும் எக்ஸ்-பிரஸ் ஹாலிடேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து அவசர தேவை மற்றும் சுற்றுலா போன்றவற்றிக்கு வாடகை ஹெலிக்காப்டர் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

    தனி நபர்களின் தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள், திருமணம், பிறந்த நாள் மற்றும் மற்ற விழாக்கள், நகர சுற்றுப்பயணம், மருத்துவ அவசர தேவைகளுக்கும் ஹெலிக்காப்டரை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

    முதற்கட்டமாக அரைமணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை பொதுமக்கள் கோவையில் நகர சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

    தனிப்பட்ட அவசர பயணங்களுக்கும், மருத்துவ அவசர சேவைக்கும் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் அவசரமான மருத்துவ தேவைகளுக்கு இது போன்ற வான் வழி சேவைகள் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் இருக்க வேண்டும் என்பது பலரின் கருத்து.

    வெளிநாடுகளில் தனிப்பட்ட பயணங்களுக்கு ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இந்த ஹெலிக்காப்டர் சேவையானது வரவேற்கத்தக்கது எனவும் எனினும் பாதுகாப்பு அம்சங்களை இன்னும் வலுப்படுத்த வேண்டும் எனவும் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    கோவையில் உள்ள கங்கா ஹெலிபேட் சர்வீஸ் மையத்திலிருந்து இந்த சேவை இயக்கப்படும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

  • விற்பனையை தொடங்கி ஒரே ஆண்டில் 1 லட்சம் செல்டோஸ் கார்களை விற்ற கியா நிறுவனம்

    தென்கொரியாவை தலைமை இடமாகக் கொண்ட கியா நிறுவனம் 2019 ஜுலை மாதத்தில் இந்தியாவில் கால் பதித்தது. கியா நிறுவனம் தனது முதல் கார் மாடலான செல்டோஸ் கடந்த 2019 ஆகஸ்டு அன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது, பின்பு கார்னிவல் மாடலை அறிமுகம் செய்தது.

    2019 ஆகஸ்டு முதல் இந்த ஆண்டு 2020 மார்ச் வரை 75,000 கார்களை விற்றது, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் விற்பனையை நன்கு முடுக்கிவிட்டது.

    இந்த காரை வாங்கினதுக்கு பேசாம ஒரு கழுதையை வாங்கி இருக்கலாம்! வாடிக்கையாளரின் கோபம்!!

    இதன் விளைவாக தற்போதய நிலவரப்படி 1 லட்சம் கார்களை விற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 97,745 கார்கள் செல்டோஸ் மாடல் கார்கள் ஆகும், கார்னிவல் மாடலில் 3614 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் விற்பனையை தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் 1 லட்சம் கார்களை விற்பனை செய்திருப்பதால் அந்நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது, மேலும் புதிய மாடல் கார்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போது கியா சோனட் மாடல் காரின் விற்பனைக்காக பலரும் காத்திருக்கின்றனர். கியா சோனட் கார் வருகிற 2020 செப்டம்பர் 18 அன்று விற்பனைக்கு வரும்.

    கடந்த பதிவில் செல்டோஸ் காரில் ஏற்பட்ட பிரட்சனையால் காரை வாங்கிய வாடிக்கையாளரின் செயலை பதிவிட்டிருந்தோம், கியா நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.

  • வண்டிக்கான ஆவணங்கள் காலாவதியாகி விட்டதா ? கவலை வேண்டாம் டிசம்பர் 31, 2020 வரை கால அவகாசம் நீட்டிப்பு

    தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதனால் பல இடங்களுக்கு எளிதில் செல்ல முடியாது மற்றும் குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த காரணங்களால்  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமானது தொடர்ந்து மூன்றாவது முறையாக வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களின் கால அவகாசத்தை இந்த ஆண்டு 2020 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

    இதன்படி 2020 பிப்ரவரி மாதத்திலிருந்து இன்று வரை காலாவதி ஆன அனைத்து ஆவணங்களும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும், ஏற்கனவே ஜீலை மற்றும் செப்டம்பர் வரை நீட்டித்தது, தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் வரை நீட்டித்துள்ளது.

    டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ், வாகன பதிவு, பர்மிட்ஸ், தர சான்று ஆகியவை டிசம்பர் 31, 2020 வரை செல்லும்.

    இந்தியாவில் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் இந்த அறிவிப்பால் பல வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்களும் டிசம்பர் வரை கவலை இல்லாமல் வாகனங்களை இயக்கலாம். மேலும் ஆவணங்களை புதுப்பிக்க அலுவலகங்களில் அதிக கூட்டமும் சேராது.

  • 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் நல்ல மைலேஜ் தரும் கார்கள்!

    குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் காரை வாங்க இருப்பவர்களுக்காகவே இந்த பதிவு. இதில் உள்ள அனைத்து கார்களும் 20 கி.மீ-க்கு மேல் மைலேஜ் தரக்கூடியவை, விலையும் குறைவு.

    3.டஸ்டன் Redi-GO A

    இந்த கார் 5 சீட்டர் ஹேட்ச்பேக் கார், இதன்  சென்னை, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ3.61 லட்சம் மட்டுமே, ஆன்-ரோடு விலை ரூ. 4.30 லட்சம் மட்டுமே.

    இந்த கார் 20.7 கி.மீ/லி மைலேஜ் தரும், இதில் ஏ.பி.எஸ், ஈ.பி.டி, ஏர்பேக், ஏ.சி, ஹீட்டர் போன்ற வசதிகள் உள்ளன.

    இதன் பி.எஸ்6, 799 சி.சி, 3 சிலிண்டர், 0.8 லி DOHC பெட்ரோல் இன்ஜினானது 53.6 பி.ஹச்.பி என்ற அதிகபட்ச பவரை 5600 ஆர்.பி.எம் மற்றும் 72Nm என்ற அதிகபட்ச டார்க்கை 4250 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்தும்.

     

    2.மாருதி ஆல்டோ 800 LXI

    இந்த கார் 5 சீட்டர் ஹேட்ச்பேக் கார், LXI வேரியண்ட் அதிகமாக விற்பனையாகும் வேரியண்ட் ஆகும். இதன் சென்னை, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ3.58 லட்சம் மட்டுமே, ஆன்-ரோடு விலை ரூ. 4.15 லட்சம் மட்டுமே.

    மாருதி ஆல்டோ 800, 22 கி.மீ/லி மைலேஜ் கொடுக்கிறது. இதில் ஏ.பி.எஸ், ஏர்பேக், ஏ.சி, ஹீட்டர் போன்ற வசதிகள் உள்ளன.

    இதன் பி.எஸ்6, 796 சி.சி, 3 சிலிண்டர், F8D DOHC பெட்ரோல் இன்ஜினானது 47.3 பி.ஹச்.பி பவரை 6000 ஆர்.பி.எம் மற்றும் 69 Nm என்ற அதிகபட்ச டார்க்கை 3500 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.

     

    1.ரெனால்ட் க்விட் பிஎஸ் 6 RXE

    இந்த கார் 5 சீட்டர் ஹேட்ச்பேக் கார், இந்த காரின் சென்னை, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ3.74 லட்சம் மட்டுமே, ஆன்-ரோடு விலை ரூ. 4.47 லட்சம் மட்டுமே.

    ரெனால்ட் க்விட்,  25.17 கி.மீ/லி மைலேஜ் கொடுக்கிறது, இதில் ஏ.பி.எஸ், ஈ.பி.டி, ஏர்பேக், ஏ.சி, ஹீட்டர், ஸ்பீக்கர்கள், எல்.இ.டி பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள் போன்ற வசதிகள் உள்ளன.

    ரெனோ க்விட் 1.0 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

    இதன் பி.எஸ்6, 799 சி.சி, 3 சிலிண்டர், DOHC பெட்ரோல் இன்ஜினானது 53.3 பி.ஹச்.பி அதிகபட்ச பவரை 5678 ஆர்.பி.எம் மற்றும் 72Nm டார்க்கை 4386 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்தும்.

தகவல்கள்
   
புது வரவு
பராமரிப்பு